சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில் பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளையில் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது ..

by Lifestyle Editor

அதன்படி, சென்னையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலையில் சிறு தீனி எனப்படும் ஸ்நாக்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் மேயர் பிரியா அறிவித்தார். மேலும், பரமாரிப்பு பணிகளுக்காக ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுளது. சென்னையில் 10 மேல்நிலைப்பள்ளிகளில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆய்வகம் மேம்படுத்தப்படும் என்றும், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் தினமும் 10 நிமிடங்கள் மகிழ்ச்சியான வகுப்பு நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Posts

Leave a Comment