விருச்சிகத்தில் உருவாகியுள்ள புதாதித்ய ராஜயோகம்: அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை பிரகாசமா இருக்கும்

by Lifestyle Editor

வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ராசியை மாற்றும் வேளையில், சில சமயங்களில் கிரக சேர்க்கைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியன் நவம்பர் 17 ஆம் தேதி விருச்சிக ராசியில் நுழைந்தார். ஏற்கனவே நவம்பர் மாதத்தின் தொடக்கத்தில் புதன் விருச்சிக ராசிக்குள் நுழைந்து பயணித்து வருகிறார்.

இதனால் விருச்சிக ராசியில் சூரியன் மற்றும் புதனின் சேர்க்கையால் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த சுப யோகமானது 10 நாட்கள் வரை தான் நீடித்திருக்கும். ஏனெனில் நவம்பர் 27 ஆம் புதன் தனுசு ராசிக்குள் நுழையுவுள்ளார். விருச்சிக ராசியில் உருவாகியுள்ள புதாத்திய ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு இந்த யோக காலத்தில் திடீர் பண வரவும், அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றியும் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

விருச்சிகம்

விருச்சிக ராசியின் முதல் வீட்டில் புதாதித்ய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சமூகத்தில் நல்ல மரியாதையையும், கௌரவத்தையும் பெறுவார்கள்.

நீதிமன்றத்தில் சொத்து தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இந்த யோக காலத்தில் தீர்ப்பானது சாதகமாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன் கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.

கடகம்

கடக ராசியின் 5 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். நிதி ரீதியாக சிறப்பான பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. முதலீடுகளை செய்யும் எண்ணம் இருந்து செய்தால், நல்ல பலனைப் பெறக்கூடும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். முக்கியமாக எதிர்பாராத பண வரவைப் பெற வாய்ப்புள்ளது.

மீனம்

மீன ராசியின் 9 ஆவது வீட்டில் புதாத்திய ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பாக செயல்படுவார்கள் மற்றும் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு இக்காலகட்டத்தில் நிறைய லாபம் கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை கிடைக்கலாம். வெளிநாடு செல்லும் ஆசை இருந்தால், இக்காலத்தில் அதற்கான வாய்ப்பு கிடைக்கலாம்.

Related Posts

Leave a Comment