நாளை முதல் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடக்கம் ..!

by Lifestyle Editor

பத்தாம் வகுப்பு பொது தேர்வு ஒன்பது லட்சத்து 76 ஆயிரத்து 89 மாணவ மாணவிகள் எழுதுகிறார்கள் என தேர்வு துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவ மாணவிகள் மட்டும் இன்றி சிறை கைதிகள் 264 பேர் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகிறார்கள் என்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுபவர்களில் 13,151 பேர் மாற்றுத்திறனாளிகள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இரண்டு மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு வசதியாக 4000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Posts

Leave a Comment