பாக்ஸ் ஆபிஸில் நம்பர் 1 இடத்தை பிடித்த துணிவு மற்றும் வாரிசு ..

by Lifestyle Editor

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இந்த வருட ஆரம்பமே அமர்க்களமாக துவங்கிவிட்டது, காரணம் இரண்டு பெரிய நடிகர்களான விஜய் மற்றும் அஜித்தின் படங்கள் ஒரே நாளில் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு படு குஷியை தந்துள்ளது.

அதுமட்டும் இல்லாமல் இரண்டு படங்களும் நல்ல தரமான கதைக்களத்தை கொண்டதால் விமர்சனமும் அமோகமாக வந்துள்ளது.

முதல் நாள் வசூலிலும் இரண்டு படங்களும் ரூ. 20 கோடிக்கு செய்துள்ளது.

தற்போது அஜித்தின் துணிவு திரைப்படம் தமிழகத்தில் ரூ. 25 கோடிக்கு மேல் வசூலித்து நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் கேரளாவில் விஜய்யின் வாரிசு பெரிய வசூல் செய்து அங்கு முதல் நாள் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதாம்.

Related Posts

Leave a Comment