மீண்டும் விவாகரத்தா? ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்திய செல்வராகவன் …

by Lifestyle Editor

வித்தியாசமான படங்களை இயக்கி மக்களை கவர்ந்தவர் இயக்குனர் செல்வராகவன். இவர் துள்ளுவதோ இளமை படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.

இவர் இயக்கிய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற படங்கள் வர்த்தக ரீதியாக தோல்வி அடைந்தாலும், இப்படங்கள் இன்று வரை மக்களால் கொண்டாடப்படுகிறது. கதை ஆசிரியர், இயக்குனர் என மக்களை கவர்ந்த செல்வராகவன் சமீபகாலமாக நடிகராகவும் வலம் வருகிறார்.

செல்வராகவன் இயக்கத்தில் பல படங்களில் நடித்த நடிகை சோனியா அகர்வாலை 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். சில ஆண்டுகளிலே அவர்களுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து செய்து கொணடனர்.

இதைதொடரந்து தன்னிடம் உதவி இயக்குனராய் இருந்த கீதாஞ்சலி என்பவரை மறுமணம் செய்து கொண்டார்.

அடிக்கடி தத்துவங்களை ட்விட்டரில் பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அதில், ” தனியாகத்தான் வந்தோம், தனியாகத்தான் போவோம். நடுவில் என்ன துணை வேண்டிகிடைக்கிறது? என கூறியுள்ளார்.

இந்த பதிவிற்கு பலரும் “இரண்டாவது மனைவியும் விவாகரத்து செய்ய போகிறாரா?” என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

Related Posts

Leave a Comment