வெளிநாடுகளில் புக்கிங் ஆரம்பம்! மாஸ் காட்டும் வாரிசு…

by Lifestyle Editor

இங்கிலாந்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் அஜித் – விஜய் இருவரும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும், இவர்களது ரசிகர்கள் எப்போதுமே எலியும், பூனையுமாக தான் இருந்து வருகிறார். இதன்காரணமாகவே இவர்கள் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் ஒன்றாக ரிலீஸ் செய்யப்படுவதில்லை. ஆனால் வருகிற 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் – அஜித் படங்கள் நேருக்கு நேர் மோத உள்ளன.

கடந்த 9 ஆண்டுகளாக இவர்களின் படங்கள் ஒரே தினத்தில் ரிலீசாகாமல் இருந்து வந்தன. இந்நிலையில், வருகிற பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸாக உள்ளன. இதனால் யார் படம் வெற்றிபெறப்போகிறது, வசூலை வாரிக் குவிக்க போகிறது என்கிற பேச்சு தற்போதிலிருந்தே எழத்தொடங்கி உள்ளது.

தமிழ்நாட்டை பொறுத்தவரை இரண்டு திரைப்படங்களுக்கு சம்மான அளவிலான தியேட்டர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஆனால் வெளிநாட்டை பொறுத்தவரை விஜய்யின் வாரிசு படம் தான் ஆதிக்கம் செலுத்தும் என்று கூறப்பட்டு வந்தது. அதற்கு ஏற்றார் போல் தற்போது வெளிநாட்டில் ஆரம்பமாகி உள்ள முன்பதிவில் வாரிசு திரைப்படம் தான் அதிகளவு வசூல் செய்துள்ளது.

இங்கிலாந்தில் வாரிசு மற்றும் துணிவு படங்களின் முன்பதிவு படத்தின் ரிலீசுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கப்பட்டுவிட்டது. அதன்படி வாரிசு படத்துக்கு அதிகளவிலான டிக்கெட்டுகள் முன்பதிவு ஆகி உள்ளதாக கூறப்படுகிறது. தற்போது வரை வாரிசு படம் முன்பதிவு மூலம் ரூ.12.25 லட்சம் வசூலித்து உள்ளதாகவும், துணிவு படம் வெறும் ரூ.2.95 லட்சம் மட்டுமே வசூல் ஈட்டி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts

Leave a Comment