பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 13,494பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர். மேலும் 678பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்டநாடுகள் வரிசையில் ஐந்தாவது நாடாக பிரித்தானியா விளங்குகிறது. இங்கு கொரோனா தொற்றினால், 39 இலட்சத்து 98ஆயிரத்து 655பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை ஒரு இலட்சத்து 15ஆயிரத்து 529பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 18இலட்சத்து 26ஆயிரத்து 865பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் மூவாயிரத்து 132பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன், இதுவரை கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து 20இலட்சத்து 56ஆயிரத்து 261பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.