பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயமாக எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கை வருகிறார்.
வெளிவிவகார அமைச்சு இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இவ் விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன ஆகியோரை, பாகிஸ்தான் பிரதமர் சந்திக்க உள்ளார்.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.