நெதர்லாந்தில் அமுலிலுள்ள ஊரடங்கு சட்டம் நீக்கப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.
COVID- 19 கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கொள்ளப்படும் வன்முறை போராட்டங்கள் மூன்றாவது நாளாக தொடர்ந்த போதிலும் அரசாங்கத்தின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
Rotterdam உள்ளிட்ட மேலும் சில நகரங்களில் கடைகள் கொள்ளையிடப்பட்டன. இவ்வாறான செயற்பாடுகள் கறைபடிந்தவையென நெதர்லாந்து நிதியமைச்சர் Wopke Hoekstra தெரிவித்தார்.
வன்முறைகளில் ஈடுபட்ட 180 இற்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டனர்.