உலகளவில் கொரோனா வைரஸ் தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட ஐந்தாவது நாடாக பிரித்தானியா விளங்குகிறது. இங்கு 36இலட்சத்து 69ஆயிரத்து 658பேர் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். 98ஆயிரத்து 531பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் கொரோனா வைரஸ் தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் 22ஆயிரத்து 195பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 592பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 19இலட்சத்து 22ஆயிரத்து 909பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் நான்காயிரத்து 76பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 16இலட்சத்து 48ஆயிரத்து 218பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.