பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி புரமோ வெளியாகி உள்ளது. பிக் பாஸ் வீட்டில் இருந்து முதல் ஆளாக எவிக்ட் ஆன நடிகை ரேகா, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று நுழைந்தார்.
இந்நிலையில், தனது அப்பா குறித்து உருக்கமாக பேசி கதறி அழும் புரமோ வெளியாகி உள்ளது. முதல் ஆளாக தலைவி சனம் ஷெட்டி அவருக்கு ஆறுதல் சொல்வதை பார்த்த ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
நடிகையான பிறகு, அம்மாவை கூடவே அழைத்துச் செல்வேன். எங்க அப்பாவை இருவருமே கவனமாக பார்த்துக் கொள்ள முடியவில்லை.
அப்பா அப்படியே இறந்துவிட்டார் என எத்தனையோ வருஷ பழைய சோகக் கதையை இப்போ ஏன் பிக் பாஸ் வீட்டில் சொல்லி ரேகா கதறி அழுகிறார் என நெட்டிசன்கள் கடுப்பாகி வருகின்றனர்.