கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்கள் மதுபானம் அருந்துவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மதுபானம் அருந்தினால், மதுபானம் அவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகுவதை குறைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.
மனிதனுடைய குடலில் பல ட்ரில்லியன் நுண்ணுயிரிகள் உள்ளன, அவை உடலுக்கு நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகள் ஆகும்.
இந்த நன்மை செய்யும் நுண்ணுயிரிகள், உடலுக்குள் புதிதாக பாக்டீரியாக்களும் வைரஸ்களும் நுழைவதை தடுக்கும் முக்கியப் பணியாற்றுகின்றன.
மதுபானம், இந்த உடலிலுள்ள நன்மை செய்யக்கூடிய நுண்ணுயிரிகளில் விரும்பத்தகாத மாற்றங்களை உருவாக்கிவிடுகிறது.