ஈரேழு (பதினான்கு) லோகங்கள் என்று பலரும் சொல்வதை நாம் கேட்டிருப்போம். இந்த பிரபஞ்சத்தில் பூமி மற்றும் அதற்கு மேல் பகுதியில் 7 உலகங்களும், பூமிக்கு கீழே 7 உலகங்களும் இருப்பதாக புராணங்கள் எடுத்துரைக்கின்றன. அதன்படி இறைவன் உருவாக்கியதாக கருதப்படும் அந்த 14 உலகங்களையும், அங்கு வசிப்பவர்கள் பற்றியும் இங்கே பார்ப்போம்.
* சத்தியலோகம் – பிரம்மதேவனின் வசிப்பிடம்
* தபோலோகம் – தேவதைகள்,
* ஜனோலோகம் – பித்ருக்கள் எனப்படும் முன்னோர்கள்
* சொர்க்கலோகம் – இந்திரன் முதலான தேவர்கள்
* மஹர்லோகம் – முனிவர்கள்
* புனர்லோகம் – கிரகங்கள், நட்சத்திரங்கள்,
* பூலோகம் – மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்கள். இந்த 7 உலகங்களும் பூமிக்கு மேல்பகுதியில் இருப்பவை.
* பூமிக்கு கீழ் பகுதியில் முதல் இரண்டு லோகங்களில் அசுரர்கள் வசிக்கின்றனர்.
* சுதல லோகம் – உலகளந்த நாராயணரால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி வசிக்கிறார்.
* தலாதல லோகம் – மாயாவிகள்
* மகாதல லோகம் – புகழ்பெற்ற அசுரர்கள்,
* பாதாள லோகம் – வாசுகி முதலான பாம்பு இனங்கள்
* ரஸாதல லோகம் – அசுர ஆசான்கள் வசிப்பதாக நம்பிக்கை.