செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஒன்றியத்திற்குட்பட்ட வேட்டூர் ஊராட்சிக்குட்பட்ட மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் ரூ.40 லட்சம் செலவில் ஏரி குடிமராமத்து பணி நடந்து வருகிறது. பொக்லைன் எந்திரம் மூலம் ஏரியில் உள்ள மண்ணை அள்ளி கரையில் போட்டனர்.
அப்போது பொக்லைன் எந்திரத்தில் 6 அடி உயரமுள்ள சிவலிங்கம் கண்டெடுக்கப்பட்டது. இதனை கேள்விப்பட்ட அந்த பகுதி பொதுமக்கள் அங்கு திரண்டனர். சிலையை ஏரிக்கரை அருகே வைத்து வழிபாடு செய்தனர். மதுராகுருவாபதன்மேடு கிராமத்தில் சிவன் கோவிலோ, பெருமாள் கோவிலோ இல்லாத நிலையில் அங்கு சிவலிங்கம் கிடைத்துள்ளது