142
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்காம் மாவட்டம், கனிபோரா கிராமத்தை சார்ந்தவர் புஷ்ரா நிடா. இவர் அங்குள்ள பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயின்று வருகிறார்.
சிறுவயது முதலாகவே கவிதைகளின் மீது ஆர்வம் கொண்ட புஷ்ரா நிடா, அன்னே பிராங்க் கவிதையால் ஈர்க்கப்பட்டு அதனையே எழுதவும் தொடங்கியுள்ளார். இதனைப்போல, 3 புத்தகத்தை எழுதி வழங்கி இருக்கிறார்.
அதற்காக பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ள மாணவி புஷ்ரா நிடா, ஜம்மு காஷ்மீர் பள்ளத்தாக்கின் இளைய எழுத்தாளராகவும் பிரபலம் அடைந்துள்ளார். இவர் The Davy, Tulips of Feelings, E = MC2 ஆகிய புத்தகத்தை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.