நடிகைக்காக கல்லீரல் தானம் செய்ய முன்வந்த ரசிகர்!

by Column Editor
0 comment

நடிகை லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய அவரது ரசிகர் ஒருவர் முன்வந்துள்ளார்.

மலையாளத்தில் பிரபல குணசித்திர நடிகையாக வலம் வருபவர் கே.பி.ஏ.சி.லலிதா. இவர் தமிழில் காதலுக்கு மரியாதை, காற்று வெளியிடை, அலைபாயுதே, உள்ளம் கேட்குமே, கிரீடம், மாமனிதன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் 550 க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

மலையாள இயக்குநர் பரதன் மனைவி இவர். 73 வயதான லலிதா கடந்த வாரம் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது வரை தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், லலிதாவுக்கு கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டியதிருப்பதால், கல்லீரல் தானம் கோரி அவருடைய மகள் குட்டி சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையடுத்து லலிதாவின் தீவிர ரசிகரும், கேரள நாடகக் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான கலாபவன் சோபி என்பவர் கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளார்.

இதுகுறித்து கலாபவன் சோபி கூறுகையில், “லலிதாவுக்கு கல்லீரல் தானம் செய்ய முன்வந்துள்ளேன். அவர் உறுப்பினராக இருக்கும் நாடக சங்கத்தில் நானும் உறுப்பினராக உள்ளேன். கல்லீரல் தானம் குறித்து சம்பந்தப்பட்ட மருத்துவமனைக்கு தகவல் சொல்லியிருக்கிறேன். எனக்கு 54 வயது. லலிதாவுக்கும், எனக்கும் ஒரே குரூப் ரத்தம் என்பதால் இந்த முடிவெடுத்தேன். எனக்கு மதுப்பழக்கமோ, புகைப்பழக்கமோ கிடையாது. அதனால், கண்டிப்பாக எனது கல்லீரல் அவருக்குப் பொருந்தும்” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts

Leave a Comment